யாழில் பல்பொருள் அங்காடி மீது தாக்குதல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத மூவரினால் இத் தாக்குதல் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் அங்கு பணிபுரியும் தெலிப்பாளையில் வசிக்கும் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இளைஞனின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இளைஞனின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Recommended For You

About the Author: webeditor