யாழ் அச்சுவேலியில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிகுஞ்சு!

இலங்கையில் யாழ்.அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

கோழி வளர்ப்பினை ஜீவனோபாயமாக கொண்ட வீடொன்றில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல இந்த கோழிக்குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கோழிக்குஞ்சியினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor