வேலைவாய்ப்பிற்காக நியூஸ்லாந்து செல்ல விரும்புபவர்களுக்கான தகவல்

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கைக்கான நியூசிலாந்திற்கான உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டனை (Michael Appleton) சந்தித்தார்.

உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தனது டுவிட்டர் செய்தியில்

இலங்கையின் பொருளாதாரத்தில் பணம் அனுப்பும் பங்கு, தொழிலாளர் உறவுகளை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுகள், பல கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் இலங்கையில் இருந்து வழமையான மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் அமைக்கப்படவுள்ள வேலை வாய்ப்புகள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் நியூசிலாந்து தொடர்பான பிற இடம்பெயர்வு தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய வள மையத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

பெருமளவிலான இலங்கையர்கள் இலங்கைக்கு இடம்பெயர முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது, அதேவேளை உயர் ஸ்தானிகராலயத்திற்கு தற்போது மாணவர் மற்றும் வருகை வீசாக்களுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.

இதன்மூலம், வேலை வாய்ப்புக்காக நியூசிலாந்திற்கு இடம்பெயர அல்லது பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வள மையம் வழங்கும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்களுக்கான சட்டப்பூர்வ வழியினூடாக நியூசிலாந்திற்குள் பிரவேசிக்க வழிவகை செய்வது தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நியூசிலாந்து தொடர்பான வேலை மற்றும் விசா மோசடிகள் குறித்தும் இரு அதிகாரிகளும் விவாதித்தனர்

Recommended For You

About the Author: webeditor