காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 2000 நாட்கள் நிறைவடைந்தன!

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் இன்றுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது. இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதில் வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் , ஐக்கிய நாடுகள் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிட்டதக்கது.

Recommended For You

About the Author: webeditor