இலங்கை விடுதியொன்றில் வைத்து 28 சீன பிரஜைகள் கைது!

30 மில்லியன் பணத்தை மோசடி செய்து இலங்கைக்கு தப்பிச் வந்த 28 சீன பிரஜைகள் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் 5 சீன பெண்களும் உள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனாவில் இணையத்தில் சுமார் இரண்டு மாதங்களாக இந்த பண மோசடி மேற்கொள்ளப்பட்டதாகவும், சர்வதேச பொலிஸார் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீன தூதரகத்தில் இருந்து மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வரவழைத்து சந்தேக நபர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படும் என அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin