புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் நிதி அதிகரிப்பு

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதேவ‍ேளை 2023 பெப்ரவரியில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் மொத்தமாக 407 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு பெப்ரவரியில் வெளிநாட்டுப் பணம் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுமே இருந்தது.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பதிவு செய்துள்ளது.

ஜனவரியில் இந்த எண்ணிக்கை 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

Recommended For You

About the Author: admin