யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கல்கோள் விழாவும் கல்வி ஊக்குவிப்பு நிகழ்வும்

யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்திற்கு தரம் ஒன்றிற்கு மாணவர்களை வரவேற்கும் “கால்கோள் விழாவும், கல்வி ஊக்குவிப்பு நிகழ்வும்” இன்று (28)சிறப்பாக இடம் பெற்றது.

பாடசாலை முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், லண்டனில் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களான ஆர்.விஜயரஞ்சினி, எஸ்.நவரஞ்சினி, ஜே.ஸ்ரீரஞ்சினி, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் க.ரஜனிகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களுக்கு துவிச் சக்கர வண்டிகள் இரண்டும், மடிக்கணினி ஒன்றும், புத்தகப் பொதிகள் மற்றும் 5 மாணவர்களுக்கான மாதாந்த உதவு தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

Recommended For You

About the Author: webeditor