முக்கிய தீர்மானம் மேற்கொண்டுள்ள காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்!

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டக்காரர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறுவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராது எனவும் கூறினார்.

மேலும் நகரங்களிலும் வட்டார அளவிலும் தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor