ரயில் பயணிகளுக்கான செய்தி

நாட்டில் பயணிகளின் வசதிக்காக இன்றைய தினம் (15-03-2023) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் 13 அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேரத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு (14-03-2023) முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் தீர்மானித்திருந்த நிலையில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor