கிளிநொச்சியில் முதியவரை மோதிதள்ளிய பொலிசாரின் மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சி ஏ9 வீதியில் , வேகமாக பயணித்த போக்குவரத்து பொலிசாரின் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியை துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட வேளை, வேகமாக பயணித்த போக்குவரத்து பொலிசாரின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor