பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் பெண்களுக்கான முக்கிய செய்தி

பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மாருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2 வயதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி சட்ட ரீதியான முறையில் வெளிநாடுகளுக்கு பயணிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor