சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் புதிய தமிழ் வர்த்தகர்

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாடுகளிலுள்ளவர்களின் முதலீடுகள் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம்
அத்துடன் தற்போது ஜனாதிபதி அவர்களின் பொருளாதார மீட்புக்கான திட்டங்களால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக நாடுகளிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களை இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவே எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor