நுரைச்சேலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 ஊழியர்களுக்கு கொரோனோ தொற்று!

நுரைச்சோலை லக் விஜய அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 ஊழியர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஆலையில் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்கள் PCR பரிசோதனைகள் மேற்கொண்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறு பேர் பலி
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் ஆறு கோவிட் மரணங்கள பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து தொற்றுநோயால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 16,594 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பதிவான மரணங்களில் 04 ஆண்களும் 02 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட ஐந்து பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ஏனையவர் 30-59க்கு உட்பட்டவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் தினசரி புதிய வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று மேலும் 214 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 6667,158 ஆக அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor