இலங்கை வந்த ரஷ்ய பிரஜைகளுக்கு ஏற்ப்பட்ட பரிதாபம்

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஹமொதர, மாதெல்ல துறைமுக பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடற்பரப்பில் நீராடச் சென்றநிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹுங்கம கடற்பரப்பில் இரு வெளிநாட்டு பிரஜைகள் மது அருந்திவிட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

ரஷ்ய பிரஜை ஒருவர் பலி
இந்நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் பிரதேசவாசிகள் மூலம் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 47 வயதுடைய ரஷ்ய பிரஜை ஆவார். சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor