யாசகம் பெறும் பெண்ணிடம் இருந்து குழந்தையை பறித்து சென்ற கும்பல்

பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயதுடைய குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமாக சேர்ந்து இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதியன்று பம்பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையே அபகரித்து தெமட்டகொடை பிரதேசத்துள்ள ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

எனினும் குழந்தை பாக்கியம் இல்லாத ஜோடியே இந்தக் குழந்தையை கடத்தியிருக்கவேண்டும் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor