யாழ் தென்மராட்சி பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் உண்டியல் உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் கோவிலில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோவிலின் இரண்டு உண்டியல்களை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (27) பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor