புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருக்கும் வைத்தியர்கள்

புதிதாக 2500 வைத்தியர்ளை சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாட்டில் எதிர்காலத்தில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நீங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் சில வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor