கடவுச்சீட்டு பெற இருப்பவர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கமாகும்.

0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு மக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக ஒரே நேரத்தில் 30 பேர் இந்த நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

போதியளவு குறுந்தகவல்கள் மூலம் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலை 8.00 மணி முதல் மாலை 4.45 வரை இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor