அனுர உட்பட 25 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு!

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura kumara DIssanayaka) உள்ளிட்ட 25 பேர் செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தடை உத்தரவு இன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டம் ஒன்று இன்று (26-02-2023) கொழும்பில் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகாமையில் குறித்த போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் கோட்டை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor