வவுனியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா – ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பேருந்து, துவிச்சக்கர வண்டியில் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor