தென்னிலங்கையில் மாயமான பாடசாலை மாணவர்கள்

காலி – நெலுவ, மாவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நெலுவ தேசிய பாடசாலையில் தரம் 7 மற்றும் 8 இல் கல்வி கற்கும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள் நேற்று (22) பாடசாலை முடிந்து நெலுவைக்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் நெலுவ பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு வந்து மொரவக நகருக்கு செல்வதற்கான பேருந்து கட்டணத்தை சாரதி ஒருவரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து பாடசாலை சீருடை அணிந்து மொரவக நகருக்கு செல்லும் பேருந்தில் ஏறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor