கனடாவில் இருந்து விமானத்தில் பயணம் மேற்க்கொள்வோருக்கான அறிவித்தல்!

கனடாவின் றொரன்டோ பியர்சன் விமான நிலையம் பல விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.

பனிப்புயல் தாக்கம் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்களை விமான நிலையம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

றொரன்டோவில் 15 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் பனிப்புயல் நிலவும் எனவும் றொரன்டோ சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விமான நிலையம் வருமுன் தங்களது விமானப் பயணம் பற்றிய விபரங்களை கண்டறிந்து கொண்டுத அதன் பின்னர் விமான நிலையம் வருகை தருமாறு கோரப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 18 வீதமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில விமானங்கள் நீண்ட நேரம் தாமதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor