இலங்கையில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் வெளிநாடொன்றில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 வயதான எஸ். சிந்துஜன் என தெரியவந்துள்ளது.

இவர் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் பொலிஸாரால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக சந்தேகநபர் கடந்த 17ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor