கிளிநொச்சியில் 42 போலி தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது!

கிளிநொச்சியில் 42 போலி தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்க பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (17) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor