பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாது
அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறுகையில்,

விலை உயர்த்தப்பட்டால், அதன் தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், தற்போது நிலவும் பிரச்சனைகளால் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor