வவுனியாவில் உயிரிழந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

இறந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா, ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே நேற்று (13) இவ் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சடலம் மீட்பு
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்து காணமல் போன ஒருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்‌.

இந்நிலையில் இவ் மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் இது காணமால் போனவரின் உடல் அங்கங்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor