இலங்கையின் மோட்டார் பந்தய வீராங்கனை விபத்தில் உயிரிழப்பு!

இலங்கையின் மூத்த மோட்டார் பந்தய சாம்பியனான கௌசல்யா சமரசிங்க உயிரிழந்துள்ளார்.

ஹொரணையில் இன்று இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் பேருந்து மீது மோதியதில் கௌசல்யா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கௌசல்யா ஒரு திறமையான மோட்டார் பந்தய வீரராவார்.அவர் பல முக்கிய பந்தயங்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிகளைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor