இலங்கையின் கடவுச் சீட்டுக்களில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

கடவுச்சீட்டுகளை டிஜிட்டல் மையப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அந்த பணிகள் தாமதித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் கடவுச் சீட்டுக்கு மதிப்பேற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்குவதற்கான கேள்வி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும், 8 மாதங்களுள் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor