பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மர்மங்கள் வெளிவரவுள்ளன

கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

தனித்துவமான விடயங்களை உள்ளடக்கிய மரண விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் அடங்கியுள்ளதாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையுடன் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மர்மம் முழுமையாக வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor