ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளம் போதை வியாபாரி கைது

மட்டக்களப்பு அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி இன்று (01) பிற்பகல் 2 மணியளவில் ஏறாவூர் சவுக்கடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் வாழைச்சேனைப் பிரதேசத்திற்கு வினியோகிக்கப்படவிருந்த நிலையிலேயே இவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor