இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டமானது மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளை மற்றும் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உள்ளிட்ட கட்சியின் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களபப்பு தேர்தல் தொகுதிக்குள் உள்ளடங்கும் மட்;டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர் நகரசபை, மண்முனை மேற்குப் பிரதேசசபை, மண்முனைப் பற்றுப் பிரதேசசபை போன்ற உள்ளுராட்சி மன்றங்களில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Recommended For You

About the Author: webeditor