ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இதன்போது தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor