தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை படுகொலை தின நினைவேந்தல் அனுஸ்டிப்பு…

கொக்கட்டிச்சோலை படுகொலை தின நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள தூபியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டிலும் குறித்த நினைவேந்தல் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, கொக்கட்டிச்சோலை பிரதேச சபைத் தவிசாளர் புஸ்பலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஈகைச் சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor