யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு ஆரம்பம்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை  கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் விரைவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.  சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை நடைபெறும் இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றி கலந்துகொள்ள முடியும்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியை பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன. பயிலவிரும்புவோர் வடமாகாண கல்வி அமைச்சிலோ அல்லது அதன் இணையத்தளத்திலோ விண்ணப்பப்படிவங்களை பெற்று 06.02.2023 திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு கல்வி அமைச்சு வடமாகாணம், இளைஞர் விவகார அலகு, செம்மணிவீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவைக்குமாறு  அமைச்சின்  செயலாளர் அறிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் அரச வேலைநாட்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor