கடனை மீள செலுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய சீனா!

இலங்கைக்கு சீனா வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது.

இந்த விடயம் சீன இறக்குமதி – ஏற்றுமதி வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கடனை மீள செலுத்தாதிருப்பதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்வுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor