கிளிநொச்சி பூநகரி பகுதியில் நோயாளர் காவு வண்டி மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு!

கிளிநொச்சி பூனகரி செம்மன்குன்று பகுதியில் நேற்று (23) நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம்
வீதியின் அருகே நின்ற முச்சக்கர வண்டியில் பானை கொள்வனவு செய்துவிட்டு வீதியை குறுக்கரத்து ஓடிச் சென்ற பொழுது நோயாளர் காவு வண்டி மோதியதில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் புனகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யோகநாதன் நிலோஜன் என்ற 09 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக புனகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor