கொழும்பில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் புகுந்து 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்ற ஐவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட்ட கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 50 வயதுடைய உடுமுல்ல, முல்லேரியா மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor