யாழ் கோப்பாய் நவமங்கையர் நிவாசத்தில் அறநெறி வகுப்புகள் ஆரம்பமாகின

யாழ்.கோப்பாய் – இருபாலை பகுதியில் உள்ள நவமங்கையர் நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

கோப்பாய் பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே இந்து சமய ஒழுக்கங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அறநெறி மற்றும் கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

நவமாங்கை நிவாச நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் நிதி பங்களிப்புடன் குறித்த செயற்பாடானது தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.குறித்த நிகழ்வில் யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் அதிபர் லதீசன், கோபாய் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனபாலன்,

சங்கீத விரிவுரையாளர் சிவை கு கணேசன், யாழ்.கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் சிவகனேஸ்வரன் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor