பொருளாதார நெருக்கடியால் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உடப்பட்ட பிரிவில் 931 குழந்தைகள் பாதிப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா- செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 931 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாவுக்கு பதில் வழங்கிய போதே அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

அத்துடன் 931 குழந்தைகளும், 213 கர்ப்பிணிப் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor