கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி ஒன்றினுள் இருந்து மூவர் கைது!

கொழும்பு- கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள விபசார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ – காலி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 41, 34, 41 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் இரத்மலானை, அனுராதபுரம் மற்றும் பெலவத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைதான சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதுடன் .கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor