மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நேற்று (17.01.2023) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.கருணாகரன் ஓய்வு பெற்றுச் சென்றதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் நியமனம்
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அக்டோபர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபராக கே.கருணாகரன் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் ஓய்வு பெற்று சென்றதையடுத்து கலாமதி பத்மராஜா மீண்டும் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor