35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டு மதுபானங்கள்!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொல்ரா, தல்ரா போன்ற மதுபானங்கள் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கித்துல் ரா மற்றும் பொல் ராவுக்கு உலகின் பல நாடுகளில் நல்ல கிராக்கி இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, 2021 ஆம் ஆண்டில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2022 ஆம் ஆண்டில் 21 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மதுபான ஏற்றுமதி மூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: webeditor