இலங்கையின் நாளாந்த ரயில் சேவைகளை குறைக்க தீர்மானம்!

இலங்கையில் 30 நாளாந்த ரயில் சேவைகளைக் குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது நாளாந்தம் 400 ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்றன.

அந்த எண்ணிக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை (16-01-2023) முதல் 370ஆக குறைக்கப்பட உள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (13-01-2023) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஓய்வுபெற்றுள்ள ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களை குத்தகை அடிப்படையில் சேவையில் இணைத்து கொள்வதற்கு, அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor