இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சாரம் துண்டிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் கட்டணம் 5.5 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3220 லீற்றர் டீசல் தேவைப்படுவதாகவும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor