பால் அருந்திக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மரணம்

இரண்டு வயதுடைய சிறுவன் ஒருவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.

இச் சிறுவன் மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

சம்பவம்
பால் போத்தலில் பால் அருந்திக் கொண்டிருந்த அச் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்று (8) காலை உயிரிழந்துள்ளான்.

பாலகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாலகனின் தொண்டையில் பால் அடைத்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor