மகளின் திருமணத்தன்று உயிரிழந்த தந்தை!

மகளின் திருமண நாளன்று தந்தை பலியான சம்பவமொன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் கம்பளை பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம்
மகளின் திருமண நாளன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் நடுவீதியிலேயே மரணித்துள்ளார்.

சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த மீரா சையிப் மொஹமட் சாலி (வயது 62) என்பவரே மரணித்துள்ளார்.

அந்த திருமண வைபவம் உடுநுவர பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் போது அவர் தன்னுடைய மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டியவில் இருந்து வெலம்பட எனும் இடத்தை அடையும் போது இச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor