யாழ் போதனா வைத்தியசாலையின் முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல்
இதன்போது வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல், வங்கிகளில் அதிகரித்த வட்டியை நிறுத்துதல், முறையற்ற நியமனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் இப் போராட்டமானது வைத்திய சாலையின் அத்தியாவசிய சேவைகளை பாதிக்காத வகையிலையே மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor