இலங்கையில் மீண்டும் உயர்வடையும் தங்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 674,813 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 190,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றையதினம் 174,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

Recommended For You

About the Author: webeditor