உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் திகதி தொடர்பிலான அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

கட்டுப்பணங்கள் செலுத்தல்
அதன்படி வேட்புமனுக்கள் ஜனவரி 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன், எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணங்களை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

340 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று (04.01.2022) மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஊடாக வெளியிடப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உறுப்பினர்கள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன் நடைபெற வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor