யாழ். மரியன்னை தேவாலயத்தில் விஷேட கூட்டுத்திருப்பலி ஆராதனை

2023 புதுவருடப் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆராதனைகள், கூட்டுத்திருப்பலி யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேச கூட்டுத்திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க புனித யாழ். மரியன்னை தேவாலயத்திலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேட கூட்டுத்திருப்பலியூடான ஆராதனை நள்ளிரவு இடம்பெற்றது.

இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ் கூட்டுத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார்.

இதில் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்த மக்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN